• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக சட்டப்பேரவையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காரசார விவாதம்

February 13, 2019 தண்டோரா குழு

தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமு, திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் உரை மீதான கடைசி நாள் விவாதம் இன்று நடைபெற்றது. விவாதத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை என விமர்சித்தார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய கே.ஆர்.ராமசாமி, கூட்டணி இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், அதிமுகவும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். மேலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் யார் தோளிலாவது ஏறிக்கொண்டு சவாரி செய்வது தான் காங்கிரஸ் கட்சியின் கதை என விமர்சித்தார்.
அப்போது குறுக்கிட்ட ராமசாமி, ஜெயலலிதா இல்லாமல் இன்னும் ஒரு தேர்தலை கூட அதிமுக சந்திக்கவில்லை என்றும், சந்தித்து பாருங்கள் அப்போது தெரியும் என்றார். இதற்கு பதில் கூறிய முதலமைச்சர், தாங்கள் ஜெயலலிதாவின் செல்வாக்கால் தான் வெற்றி பெற்று இருப்பதாகவும், காங்கிரஸ் யாருடைய செல்வாக்கில் வெற்றி பெற்றது என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் கே.ஆர்.ராமசாமி, திருவாரூரில் மட்டும் இடைத்தேர்தலை நடத்த முயற்சித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க திமுகவும், காங்கிரசும் அஞ்சியது ஏன்? என்றும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நீதிமன்றம் சென்று தடுத்தது திமுக தான் என்று தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருப்பரங்குன்றத்தில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று திமுக நீதிமன்றம் செல்லவில்லை என்றும், வழக்கு நிலுவையில் உள்ளதை தான் குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார். இதை அடுத்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜெயலலிதா தலைமையில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களை வென்றதாகக் கூறினார். இதனால் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

இதற்கிடையில்,இந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகன், சட்டமன்றத்தில் பேச வேண்டிய விவகாரம் இதுவல்ல எனத் தெரிவித்தார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பதில் சொல்வது தங்கள் உரிமை எனவும், அதற்கு ஏன் கோபம் வருகிறது என்றும் கேட்டார். பின்னர் ஓபிஎஸ் குறிக்கிட்டு நிதிநிலை அறிக்கை மீது பேச சொன்னால் அதைவிட்டு அரசியல் குறித்து ராமசாமி பேசியதாக கூறினார். இதனைத் தொடர்ந்து துரைமுருகனின் அறிவுரையை ராமசாமி கேட்க வேண்டும் என தெரிவித்ததை அடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்க