• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஆசிரியர்கள், ஒட்டுநர்கள் சங்கங்கள் வரவேற்பு

December 29, 2021 தண்டோரா குழு

தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள எனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள், குடும்ப
ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கிடவும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ. 1000 வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

இதற்கு தமிழ்நாடு அரசுத்துறை ஓட்டுநர்கள் மாநில சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சாமிபிள்ளை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க