• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

June 8, 2017 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் காற்றுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க