March 12, 2019
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்திரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசியல் கட்சி தலையீடு இருப்பதாகவும் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்திரவிட்டுள்ளார்.