May 3, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,757 லிருந்து 3,023ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 203 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக ஒருவர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. அதேசமயம் இன்று மேலும் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த 1,379 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.