May 25, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 805 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 93, தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யபட்டவர்கள் 712.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 549 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 10,576ல் இருந்து 11,125 ஆக உயர்ந்தது. இன்று ஒருநாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 407 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,731 பேர் குணமடைந்துள்ளனர்.