• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

May 23, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்,
மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 24 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து திரும்பிய 6 பேர் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில்
624 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்தததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 7,915 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க