• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மே 31க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை : மாநில தேர்தல் ஆணையம் உறுதி

February 28, 2019 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை மே 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 நவம்பர் 17 ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர்களுக்கு எதிராகவும் தி.மு.க. தரப்பில் R.S.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் 2016 அக்டோபரில் 2
கட்டங்களாக நடத்தப்பட்டு இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க