• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர்ந்து மூன்றாவது நாளாக திரையரங்குகள் மூடல்!!

July 5, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி இன்று மூன்றாவது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டத்தை அறிமுகப்படுத்தியது.தமிழகத்தில் மட்டும்,சினிமாத்துறையில் ஜிஎஸ்டி வரி மட்டுமில்லாமல் கேளிக்கை வரியையும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 30 சதவிகித கேளிக்கை வரி செலுத்திவரும் நிலையில், மேலும் 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சினிமாத்துறைக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள இந்த இரட்டை வரி முறையை ரத்து செய்யக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால்
கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ 35 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,தமிழகத்தில் 3வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் படங்கள் குறித்த எந்த விளம்பரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க