• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கிரையோ அபலேசன் கருவி அறிமுகம்

October 21, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில், சீரற்ற வேகமான இதயதுடிப்பை கட்டுபடுத்தும், அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிறக்கும் போதே இதயத்தில் ஏற்படும் குறைபாடுகள் மாரடைப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது மேலும் இதயத்தில் உள்ள வால்வுகளின் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது. சீரற்ற இதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில்,கோவை அவினாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில், சீரற்ற வேகமான இதய துடிப்பை கட்டுபடுத்தும், வகையிலான கிரையோ அபலேசன் எனும் நவீன வகையிலான கருவி, மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதன்முறையாக நிறுவப்பட்ட இந்த கருவியின் பயன்பாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில்,கே.எம்.சி.எச் மருத்துமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிச்சாமி பேசுகையில்,

அடிக்கடி இதயம் வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, போன்ற உணர்வு, தலைசுற்றல் அறிகுறிகள் இருந்தால், உடலின் பிற பாகங்களுக்கு ரத்த ஒட்டம், சுழற்சியாவதை தடுக்கும் எனவும், உலகில் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இந்த சீரற்ற இதயத்துடிப்பு உள்ளது, எனவும், இதனால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்,எனவே சீரற்ற இதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கருவி இங்கே நிறுவப்பட்டு உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதய மருத்துவர் டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் மற்றும் இதயத்துடிப்பு பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் ஆகியோர் கூறுகையில்,

இந்த கருவியை கொண்டு சீரற்ற இதயதுடிப்பை, புதுமையான முறையில் 80 நாடுகளில் ஒரு மில்லியன் நோயாளிகளுக்கு இந்த கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க