• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மழையிலும் தடையின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்

January 21, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஒருமித்த குரலில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஐந்தாவது நாளாக சனிக்கிழமை கோஷமிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் எந்தவித தடையுமின்றி நடந்து வருகிறது.

மதுரை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால், இதனைப் போராட்ட களத்தில் இருந்தவர்கள் சட்டை செய்யவில்லை. கொட்டும் மழையிலும் தரையில் அமர்ந்து தங்கள் உறுதியைக் காண்பித்தனர். இதுவரை கொட்டும் பனி மற்றும் வெயிலில் நடந்த போராட்டம், இன்று கொட்டும் மழையிலும் நடந்து வருகிறது.

போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பாலின வேறுபாடின்றி, சாதி, மத பாகுபாடின்றி எல்லா மக்களும் ஒரே களத்தில் போராடி வருகின்றனர். உணவு வழங்குவது, இடத்தை சுத்தமாக வைத்திருப்பது என தங்களின் பணிகளைத் தாங்களே செய்து கொண்டு முழு அர்ப்பணிப்புடன் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். மழையினால் ஏற்படும் குப்பைகளை அங்குள்ளவர்களே அகற்றி தங்களின் இடத்தைச் சுத்தமாக வைத்துள்ளனர்.

மேலும் படிக்க