June 24, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,654 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 33 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 37,763 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும்,இன்றைக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 32,079 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 9,76,431 ஆக உயர்ந்துள்ளன.