• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் ஆணையம்

June 25, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டி.ரத்னவேல், மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், ஆர். லட்சுமணன், டி. ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் திமுக 3 எம்.பி.க்களையும், அதிமுக 3 எம்.பி.க்களையும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும்.

இதற்கான தேர்தல் ஜூலை 18-ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி மற்றும் நடைமுறைகள் குறித்த அறிவிக்கை ஜூலை 1-ம்தேதி வெளியிடப்படும். ஜூலை 8-ம்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்து கொள்ளலாம். 9-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 11-ம்தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜூலை 22-ம்தேதியுடன் முடிகிறது.

மேலும் படிக்க