• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது-வானதி சீனிவாசன்

February 16, 2023 தண்டோரா குழு

கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2.50 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,

கணபதி பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அப்பகுதி மக்கள் அங்குள்ள 70வருட பழையான கோவிலை கொடுத்துள்ளார்கள், அதற்கு மாற்று இடமாக காவலர் குடியிருப்பு பகுதியில் 3 சென்ட் நிலத்தை தருவதாக, ஆணையாக வழங்கியுள்ளது. ஆனால் அந்த ஆணை வழங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட இந்து அறநிலைய துறை சார்பில் கோவில் கட்டுவதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து கேட்கும் பொழுது பல்வேறு காரணங்களை காட்டி அரசு அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். இதுபோன்று கோவில்களை அரசு எடுக்கின்ற பொழுது அதற்கு மாற்று இடம் கொடுத்து உடனடியாக அந்த இடத்தில் கோவில்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் டாடாபாத் பகுதியில் தனிநபர் ஒருவர் அவரது தொழிலுக்காக அங்குள்ள கோவிலை எடுக்க வேண்டும் என மனு அளித்ததன் அடிப்படையில் அந்த கோவிலை அதிகாரிகள் அகற்ற வருகின்றனர். சிவானந்த காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அங்குள்ள கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவதை நான் வரவேற்கிறேன், அதேசமயம் அப்பகுதியில் உள்ள திமுக மன்றம் அரைகுறையாக கட்டி அகற்றப்படாமல் இன்னும் உள்ளது அதனை அகற்றும் படி நான் பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுள்ளேன்.

மாநில அரசாங்கம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முதலில் கோவில்களை அகற்றுவதில் தான் உள்ளது, ஆனால் கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டு கொள்வதில்லை. மேலும் கோவை மாநகராட்சியை புறக்கணிக்காமல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பவும் வைக்கிறேன். மேலும் இந்த மாநகராட்சி நிர்வாகம் கோவையை தூய்மைப்படுத்துவதற்காக முதல் கட்ட முயற்சியாக மேம்பால தூண்களில் அழகான சித்திரங்கள் வரையும் முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார்கள்.

சென்னையிலும் மேம்பாலத் தூண்களில் தமிழர்களின் பெருமையை சாற்றும் அழகான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது அதனை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அதுபோன்ற ஒரு முயற்சியை கோவை மாநகராட்சியும் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்தில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் ஒரு சமுதாயத்தைப் பற்றி தவறான செய்தி வந்திருக்கிறது என்ற காரணத்தினால், அப்பகுதியில் உள்ள அனைத்து சித்திரங்களையும் அழிப்பது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். இது போன்ற காரியங்களில் ஈடுபடும் நபர்கள் அதனை தவிர்க்க வேண்டும். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் அமர்ந்துள்ளார்கள். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு படுகொலைகள் நடக்கிறது தொடர்ச்சியாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. திமுகவில் இருப்பவர்கள் அல்லது அவர்களது ஆதரவை பெற்றிருக்கக் கூடியவர்கள் அரசாங்கம் அவர்களிடத்தில் இருக்கின்றது என்ற காரணத்திற்காக வன்முறையில் ஈடுபடுவது குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது போன்ற செயல்கள் தங்கள் கட்சியை சார்ந்தவர்கள் என்ன செய்தாலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை காட்டுகிறது. இது போன்ற நடக்கின்ற பொழுது மாநிலத்தின் முதலமைச்சர் அவர்களது கட்சிக்கு சரியான கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் மாநில முழுவதும் உள்ள மக்களின் தேவைகளை பார்க்க வேண்டும். பாஜக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், குற்ற சம்பவங்களில் விரைந்து நடவடிக்கை என்பது நல்ல விஷயம் ஆனால் அதனை தடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். எடுத்துக்காட்டாக கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அதன் பின் புலத்தில் ஒரு கூட்டமே இருந்து செயல்படுகிறது என்றால் குண்டுவெடித்த பின்பு நடவடிக்கை எடுக்காமல் அதற்கு முன்பே நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடமை.

குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்வது என்பது ரவுடிகளுக்கு பயமின்மை என்பது அதிகரித்து வருகிறது இல்லையெனில் கட்சியை சேர்ந்தவர்களே இது போன்ற வன்முறைகளில் முன்னின்று ஈடுபடுவது என்பதுதான் எங்களது கருத்து இதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க