May 5, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,537 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 279 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,008 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் புதிதாக 68 பேருக்கும், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டில் தலா 38 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இருவர் பலியாகியுள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது.