• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – ஒரே நாளில் 3509 பேர் பாதிப்பு !

June 25, 2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது. அதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,834 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 45 பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை மொத்தம் 39,999 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்,இன்றைக்கு 32,543 மாதிரிகள் . பரிசோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 10,08,974 ஆக உயர்ந்துள்ளன.இன்றைய தேதியில் 30, 064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க