April 9, 2019
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22 தொடங்கும் எனவும் ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாள், ஏப்ரல் 30 வேட்புமனு மறுபரிசீலனை, மே 2 வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம், மே 19 வரை வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கை என தேர்தல் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.