• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?

January 10, 2022 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுதொடார்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி,

“தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. முதலமைச்சர் ஆலோசனைப்படியும், கொரோனா தாக்கம் காரணமாகவும் அனைத்து பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்” என்று கூறினார்.

மேலும், தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்.விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க