June 4, 2018 தண்டோரா குழு
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய 1.14 லட்சம் மாணவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் “நீட்” தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு கடந்த(மே 6)ம் தேதி நடைப்பெற்றது.இந்த ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.இந்த தேர்வு முடிவுகளில் பீகார் மாணவி கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,தெலங்கானாவைச் சேர்ந்த ரோகன் புரோகித் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12ம் இடம் பெற்றுள்ளனர்.