June 19, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று புதிதாக 2,115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 2,115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,075 பேர்.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 1,322 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 41 பேர்
கொரோனாவால் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில்,இன்று மொத்தம் 1,635 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 30,276 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்,
இன்று 27,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 8,27,980 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 23,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.