June 12, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 1,982 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,479 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 18 பேர் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 8 பேர், அரசு மருத்துவமனையில் பலியானோர் 10 பேர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 18,231 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.இதுவரை மொத்தம் 6,73,906 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.