June 18, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 1,373 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,091 பேர்.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மொத்தம் 1,017 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28,641 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று 26,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 8,00,443 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.