• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று – 30 பேர் உயிரிழப்பு

June 13, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 1,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,956 பேருக்கும்,வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில்
1,487 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 30 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
இதில் தனியார் மருத்துவமனையில் 12 பேரும், அரசு மருத்துவமனையில் 18 பேரும் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 18,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க