June 26, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1957 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு
எண்ணிக்கை 49690 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 46 பேர் உயிரிழந்தனர். இதன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் குணமடைந்தோர் எண்ணிக்கை 42, 357 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 89 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,317 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.