• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

June 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 52 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 59,377 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1493 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில் 43 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 86 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 31,401 மாதிரிகள் சோதனையிடப் பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,92,612 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க