• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா!

May 30, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 856. வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 82.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்றைக்கு 616 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 21, 184 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,000 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 9,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று மட்டும் 12,039 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,57,233 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க