• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கு 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு

January 4, 2017 தண்டோரா குழு

தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே, “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால், தமிழகத்தில் 60 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் ” என வாதத்தை முன்வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்குக் காவிரி நதியிலிருந்து விநாடிக்கு 2000 கனஅடி நீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 7 ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. பிப்ரவரி 7 ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி என ஒவ்வொரு தரப்பிற்கும் பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்படும்” என்றார்.

மேலும் படிக்க