• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

May 3, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இது தொடா்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையின் போது மத்திய அரசு சார்பில், வரைவு திட்டம் தயாராகி விட்டது,ஆனால் பிரதமா் மோடி உள்பட மத்திய அமைச்சா்கள் அனைவரும் கா்நாடக தோ்தலில் பிரசாரத்தில் உள்ளனா்.

இதனால் வரைவு திட்டத்தை தாக்கல் செய்து ஒப்புதல் பெறமுடியவில்லை. எனவே வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும்,உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என கூறி வரும் 8 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க