January 3, 2019
தண்டோரா குழு
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் பயிற்சியாளர் அச்ரேக்கர் அச்ரேக்கர் உடல் வைக்கப்பட்ட ஸ்ட்ரக்ச்சரை தனது தோளில் சுமந்து சென்றார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை வளர்த்து உருவாக்கிக் கொடுத்தவர் ராமாகந்த் அச்ரேக்கர்(87). தன் சிறுவயதில் சச்சின் டெண்டுல்கர் இவரின் தான் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக்கொண்டார். ச்சின் தன் சிறுவயதில் சிவாஜி பார்க் மைதானத்தில் அச்ரேக்கரின் கீழ் தன் கிரிக்கெட் வாழ்வை உருப்படுத்திக்கொண்டார். அதிலிருந்து குரு-சிஷ்ய உறவு இருவருக்கும் இடையே உறுதியாக வளர்ந்து வந்தது.
சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாது பிரவீண் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே போன்ற வீரர்கள் மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோரையும் உருவாக்கியவர் ராமாகந்த் அச்ரேக்கர் தான். இவர் துரோணாச்சரியர் விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில், வயதானதால் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு வந்த ராமாகந்த்
அச்ரேக்கர் புதனன்று மும்பையில் காலமானார்.
இந்நிலையில், அவருக்கு இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. அப்போது, அச்ரேக்கர் உடல் வைக்கப்பட்ட ஸ்ட்ரக்ச்சரை சச்சின் தனது தோளில் சுமந்து சென்றார். அச்ரேக்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய இடத்தில் சச்சின் சோகமே வடிவானவராக காணப்பட்டார்.