• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் சிமென்ட் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பெண்கள்

August 26, 2020 தண்டோரா குழு

தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொழிற்சாலை அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை காரணமாக அருகில் வசித்து வரும் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சிமென்ட் தொழிற்சாலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிற்சாலை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்,

கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிமெண்ட் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருவதால், அதிலிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை அருகில் உள்ள வீடுகள் விவசாய நிலங்களில் படர்வதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை அலுவலகத்திற்கு சென்ற போது அவர்களை தொழிற்சாலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.இதையே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை காவல்துறையினர் இரு தரப்பினரிடையேயும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த பெண்கள் தொழிற்சாலை நிர்வாகம் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் தொடர்ந்து இதுபோன்று தூசு கலந்த புகை வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

சிமெண்ட் தொழிற்சாலையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் இங்கு பணிபுரிந்து வருவதால் அவர்கள் தொழிற்சாலையிலிருந்து தூசுகள் அந்த புகை வெளியேறும் விவகாரத்தில் புகார் அளிக்க முன்வருவதில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு ஏதுமின்றி சுமூகமாக தீர்வு எட்ட முயன்று வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க