• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனிக்கொடி உருவாக்குகிறது கர்நாடகா

July 18, 2017 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடி அமைப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா 9 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார்.

இந்தி திணிப்பிற்கு எதிராக அண்மையில் கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதிலிருந்து கர்நாடகாவிற்கென தனிக்கொடி அமைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், மாநில முதல்வர் சித்தராமையா இது தொடர்பாக அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுடன் 9 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார்.இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்தின் பேரில் தனிக்கொடி உள்ளது. அந்தவகையில் கர்நாடக தனிக்கொடியை உருவாக்கினால், இந்திய அளவில் தனிக்கொடி கொண்ட 2வது மாநிலம் என்ற பெருமையை கர்நாடகம் பெறும்.ஆனால், இதற்கு அம்மாநில எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க