• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் பேனர் போஸ்டர்களை வைக்க ரஜினி புதிய கட்டுப்பாடு

September 5, 2018 தண்டோரா குழு

அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர் பேனர்களை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுபாடுகள் விதித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மன்றத்துக்கு பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அண்மையில் மக்கள் மன்றத்தில் சேர புத்தக வடிவில் பல்வேறு விதிகள் விதித்திருந்தார். இந்நிலையில்,தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார்.

அதன்படி, பேனர், போஸ்டர்களை தலைமை மன்றத்திற்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பின்னரே, அதனை வைக்க வேண்டும். மாநகரத்துக்கு உட்பட்ட மண்டல நிகழ்வில், மாநகர செயலரை விட மண்டல நிர்வாகி படம் சிறியதாக இருக்க வேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க