• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகள் சிறையிலிருந்த கைதுக்கு நஷ்டயீடு தர நீதிமன்றம் உத்தரவு

July 22, 2017 தண்டோரா குழு

சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும், 3 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஔரங்காபாத் நகரை சேர்ந்த தரஞ்சித் சிங் கொலை குற்றத்திற்காக கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பின், மும்பை அமர்வு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எனினும், மும்பை உயர்நீதிமன்றத்தில், குற்றவியல் முறையீடு மூலம் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இதையடுத்து, 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பிறகும், சிறை அதிகாரிகள் அவரை விடுவிக்கவில்லை. தண்டனை காலத்தோடு மேலும் 3 ஆண்டுகள் அவரை சிறையில் வைத்திருந்தனர்.

அதன் பிறகு வெளிய வந்த அவர், சிறைகாலம் முடிந்த பிறகும், தன்னை சிறையில் வைத்திருந்த அதிகாரிகள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஔரங்காபாத் பெஞ்ச் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையின் முடிவில், சிறைத்தண்டனை காலம் முடிந்த பிறகும், கைதியை 3 ஆண்டுகள் சிறையிலேயே வைத்திருந்த குற்றத்திற்காக, அவருக்கு நஷ்டயீடாக 2 லட்சம் ரூபாயை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தீர்பளித்தனர்.

மேலும் படிக்க