• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்கு ஒழிப்பு பணிகளில் 800 களப்பணியாளர்கள்

December 9, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் 800 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் இந்த களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.தண்ணீரில் அபேட் மருத்துகளை ஊற்றுவர்கள். அதன் பின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று சுற்றி 500மீட்டர் தூரம் வரை மாஸ் கிளினிங் என சொல்லக்கூடிய சுகாதார பணியில் ஈடுபடுவார்கள்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கோவை மாநகராட்சி பகுதியில் ஒரு வார்டுக்கு 8 பேர் வீதம் 100 வார்டுக்கு 800 களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.

மேலும் படிக்க