• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெங்குவை ஒழிக்காவிட்டால் ஒதுங்கி கொள்ளுங்கள்: அரசுக்கு கமல் வேண்டுகோள் !

July 20, 2017 தண்டோரா குழு

டெங்குவை ஒழிக்காவிட்டால் ஒதுங்கி கொள்ளுங்கள் என தமிழக அரசுக்கு கமல் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் சமீபகாலமாக அரசியல் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் கமல் கருத்து தெரிவித்தார். அதற்கு பின் அமைச்சர்களும் கமலுக்குமிடையே கருத்து யுத்தம் ஆரம்பமானது. இதற்கிடையில், நேற்று கமல் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன். ஊழல் குறித்த விவரங்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் என்று டுவிட்டரில் கேட்டுக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், இன்றும் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,பள்ளிப் படிப்பை முடிக்காதவன் ” நீட்” ன் கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்!என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க