February 27, 2019
பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் புதுச்சேரியில் டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார்.
நடிகர் ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு மாநில துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சித் பாமகவில் இருந்து நேற்று விலகினார்.
இந்நிலையில், பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் புதுச்சேரியில் டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்தேன். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்துள்ளதாக நடிகர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.