• Download mobile app
29 Apr 2026, WednesdayEdition - 3731
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாடா குழுமத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் பொறுப்பேற்றார்

February 21, 2017 தண்டோரா குழு

டாடா தொழிற்குழுமத்தின் புதிய தலைவராக என். சந்திரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் ரத்தன் டாடா கடந்த மூன்று மாதங்களாக,தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் டாடா குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த அதிகாரிகளில் ஒருவரான சந்திரசேகரன், துல்லியமான வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர் எனக் கூறப்படுகிறது.மேலும் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸின் தலைமைப் பொறுப்பையும் சந்திரசேகரன் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க