• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாடா கிராண்ட் காஃபி நிறுவனம் பொங்கல் பண்டிகைக் காலத்தில் தனித்துவமான ஒலிகளைக் கொண்டாடுகிறது

January 13, 2022 தண்டோரா குழு

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் ஆன டாடா காஃபி கிராண்ட், தமிழ்நாட்டில் காபியுடன் தொடர்புடைய உணர்ச்சிகளையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் அதன் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறது.

இதையொட்டி, டாடா காபி கிராண்டின் ‘சவுண்ட்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ பிரசார இயக்கத்தின் வாயிலாக பொங்கலின் தனித்துவமான உணர்வைப் பிரதிபலிக்கும் பல்வேறு ஒலிகளைக் கொண்டாடும் ஒரு பண்டிகைக்கால விளம்பரப் படத்தை டாடா காபி கிராண்ட் பிராண்ட் வெளியிட்டுள்ளது.

இந்தத் துடிப்பான பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு காட்சிகள் மற்றும் ஒலிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. கரும்பை முறுக்கிக் கடிக்கும் சத்தம், குழந்தைகளின் கொலுசுகளின் சத்தம், ‘குலவை’யின் இசை ஒலிகள் போன்றவை இந்த விளம்பரப்படத்தில் இடம்பெற்றுள்ளன. வகை வகையான சுவையான பொங்கல் உணவுகள், குடும்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் தமிழ் கலாசாரத்தின் செழுமையான அம்சங்களால் நிரம்பிய விளம்பரப் படம் இதுவாகும். அத்துடன் ‘எந்தவொரு பண்டிகையையும் காபி இல்லாமல் எப்படி கொண்டாட முடியும்?’ என்ற கருத்துடன் இந்த விளம்பரப் படம் நிறைவடைகிறது.

இந்த விளம்பரப் படத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்த டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட பானத் தயாரிப்புகள் பிரிவின் இந்திய மற்றும் தெற்காசியப் பிரிவுத் தலைவர் புனித் தாஸ்,

“கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் டாடா காபி கிராண்ட் விளம்பரப் பிரசார இயக்கம், டாடா காபி கிராண்ட் காபியின் குடுவை அல்லது பேக் செய்யப்பட்ட கவர் குலுக்கப்படும்போது கேட்கப்படும் ஒலியைக் குறிக்கும் வகையில் பிரதமாக அமைந்துள்ளது. அதாவது ஷிக்-ஷிக்-ஷிக் என்ற ஒலியுடன் ‘காபி’ என்ற வார்த்தையை ஒட்டியதாக இந்த படம் அமைகிறது! இந்த ஆண்டு ஒரு படி மேலே சென்று, காபி குடிக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகளுடன் பண்டிகையின் உற்சாகத்தையும் படம்பிடித்துள்ளது புதிய விளம்பரப் படம். அதாவது, பொங்கல் பண்டிகையின் போது ஒலிக்கும் சிறப்பு ஒலிகளுடன் ‘ஷிக் ஷிக் ஷிக்’ என்ற ஒலியையும் இணைத்து இதை விரிவுபடுத்தியுள்ளோம்.

இந்த விழாக்கள் காட்சிகளில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. அறுவடை காலம் முழுவதும் எதிரொலிக்கும் தனித்துவமான ஒலிகளையும் பிரதிபலிக்கிறது. இதை சிறப்பித்துக் காட்டும் வகையில், உணர்வுகளுக்கு இரட்டிப்பு விருந்தாக இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பண்டிகை ரசனையைக் கொண்டாடும் தனித்துவமான ஒலி வடிவமைப்பைக் கொண்டதாகவும் எங்கள் புதிய விளம்பரப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த விளம்பரப் பட படைப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த லோவ் லிண்டாஸ் சவுத் நிறுவனத்தின் செயல் தலைவரும் கிளைத் தலைவருமான சோனாலி கன்னா, “பொங்கல் என்பது தமிழ்நாட்டு மக்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமான ஒரு பண்டிகையாகும். இந்தப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது தனித்துவமான காட்சிகள் மற்றும் ஒலிகளை பார்ப்பதும் கேட்பதும் உண்டு. இந்த விளம்பரப் படத்தில் பொங்கலின் பல உண்மையான ஒலிகள் மும்மடங்காக வெளிப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

எங்கள் தயாரிப்பின் தனித்துவமான விற்பனை முனையத்துக்கு (யுஎஸ்பி) புத்துயிரூட்ட நாங்கள் பயன்படுத்திய செவிவழி நினைவுகள் மற்றும் ஒலிகள் தான் இவை. பாக்கெட்டின் ‘ஷிக் ஷிக் ஷிக்’ டாடா காபி கிராண்ட் காபித் தூளின் படிகத் தன்மை எனப்படும் கிரிஸ்டல் அம்சங்களைக் குறிக்கிறது. மூன்று இசைகளின் அற்புதமான கலவை, கண்கவர் பண்டிகை வண்ணங்கள் மற்றும் காபி பேக்கின் கவர்ச்சியான ஒலி அனைத்தும் தடையின்றி இந்த விளம்பரப் படத்தில் ஒன்றிணைகின்றன. பார்வைக்கு ரம்மியமாக இருப்பதைப் போலவே செவிவழியாகவும் இனிமை கிடைக்கச் செய்யும் படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.”

செழுமையான மிகச்சிறந்த காபி தூள் படிகங்கள் மற்றும் சுவையுடன் கூடிய டிகாக்ஷன் கொண்ட புதுமையான கலவை இந்த பிராண்ட். டாடா காபி கிராண்ட் காபி, டாடாவின் ஆழமான பாரம்பரியத்தை மேம்படுத்துகிறது இந்திய சந்தையில் முதல் வகையான புதுமையான காபி தயாரிப்பு உருவாக்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் தயாரிப்பு சிறந்த காபி தூள் மற்றும் ‘சுவை கொண்ட டிகாக்ஷன் படிகங்கள்’ ஆகியவற்றின் கலவையாகும், இது உடனடி காபி பிரிவில் நுகர்வோருக்கு மறக்கமுடியாத சுவை அனுபவத்தை வழங்குகிறது. டாடா காபி கிராண்ட் ஒரு செறிவான மற்றும் நறுமணமுள்ள காபி ஆகும். போர்ட்ஃபோலியோ அனைத்து தென் மாநிலங்களிலும் பரவலான பிரசன்னத்துடன் ரோஸ்ட் ரூ கிரவுண்ட் (வடிகட்டி காபி) வரை விரிவடைந்துள்ளது.

மேலும் படிக்க