September 30, 2019
தண்டோரா குழு
ஜே.கே. டயர் 22வது தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2வது நாள் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற்றது. இந்த போட்டியில் எல்ஜிபி பார்முலா 4 பந்தயத்தில் சென்னையைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றார்.
சுசூகி ஜிக்சர் கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் புனேயைச் சேர்ந்த தனே கெய்க்வாட் 2வது இடம் பிடித்தார்.இதேபோல் ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை பிரிவில் மும்பையைச் சேர்ந்த ஆரோ ரவீந்திரா முதலிடம் பிடித்து முத்திரை பதித்தார். எல்ஜிபி பார்முலா 4 போட்டியில் 2வது சுற்றில் எம்ஸ்போர்ட்ஸ் விஷ்ணு பிரசாத் முதலிடத்தில் இருந்து பின்னோக்கி 2வது இடத்திற்கு சென்றார். ஆனால் தனது விடா முயற்சியின் காரணமாக அவர் 3வது சுற்றில் முன்னேறி முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினார்.மொத்தத்தில் அவர் 23 புள்ளிகளை பெற்று வார இறுதியில் போட்டியின் முடிவில் 68 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
அதே போட்டியில் ராகுல் ரங்கசாமி 16 புள்ளிகளை பெற்று இறுதிப் போட்டியின் முடிவில் மொத்தம் 63 புள்ளிகளை பெற்று 2வது இடம் பிடித்தார்.இதற்கு முந்தைய 2 போட்டிகளில் 5வது இடத்தில் இருந்த ராகுல் ரங்கசாமி முன்னேறி 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.முந்தைய போட்டியில் முதலிடத்தில் இருந்த டார்க் டான்ஸ் தில்ஜித் நேற்று நடைபெற்ற போட்டிகளில் முறையே 6வது மற்றும் 5வது இடத்தை பிடித்தார். இதன் காரணமாக புள்ளிகள் அடிப்படையில் 47 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் உள்ளார்.
ஜே.கே. டயர் சுசூகி ஜிக்சர் கோப்பை பிரிவில் முந்தைய போட்டியில் முதலிடத்தில் இருந்த புனேயை சேர்ந்த தனே கெய்க்வாட் நேற்று நடைபெற்ற போட்டியில் 2வது இடத்தை பிடித்தார்.சையது முசமில் அலி கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் 36 புள்ளிகளுடன் இருந்த அவர் நேற்று நடைபெற்ற போட்டியில் கூடுதலாக 8 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை வென்றார். அவருக்கு அடுத்ததாக 31 புள்ளிகளுடன் 3வது இடத்தை சித்தார்த் சஜன் பெற்றார்.
ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை போட்டியில் 13 கூடுதல் புள்ளிகளுடன் இருந்த ஆரோ ரவீந்திராவுக்கு கடந்த சனிக்கிழமை நடந்த போட்டி கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் கூடுதலாக 4 புள்ளிகளை பெற்று கோப்பையைச் தட்டிச் சென்றார்.மொத்தம் நடைபெற்ற போட்டிகளில் ஆரோ ரவீந்திரா 56 புள்ளிகளையும், சிராக் கோர்படே 52 புள்ளிகளையும், முகமது ரயான் 52 புள்ளிகளையும் பெற்று முறையே மூன்று இடங்களைப் பிடித்து கோப்பையைத் தட்டிச் சென்றனர்.
ஜே.கே. டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்று நடைபெற்ற 2வது நாள் பந்தயத்தின் விவரங்கள் வருமாறு˜-
ஜே.கே. டயர் எல்ஜிபி பார்முலா 4 (பந்தயம் 2) – எம்ஸ்போர்ட் பாலபிரசாத் 18˜09.374 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து பந்தய தூரத்தை 18˜12.358 நிமிடத்தில் கடந்து விஷ்ணு பிரசாத் 2வது இடத்தையும், அஸ்வின் தத்தா 18˜15.824 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்து 3வது இடத்தையும் பிடித்தனர்.இதேபோல் 3வது பந்தயத்தில் விஷ்ணு பிரசாத் முதலிடத்தையும், ராகுல் ரங்கசாமி 2வது இடத்தையும், அஸ்வின் தத்தா 3வது இடத்தையும் பிடித்தனர்.ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை (பந்தயம் 2) – சிராக் கோர்படே முதலிடத்தையும், ஆதித்ய சுவாமிநாதன் 2வது இடத்தையும், ஹிமன்சு துக்ரல் 3வது இடத்தையும் பிடித்தனர். ஜே.கே. டயர் சுசூகி ஜிக்சர் கோப்பை (பந்தயம் 2) – சையது முசமில் அலி முதலிடத்தையும், தனே கெய்க்வாட் 2வது இடத்தையும், சித்ராத் சஜன் 3வது இடத்தையும் பிடித்தனர்.