• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி

October 27, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி கட்டிடங்களை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்க உள்ளார்.

கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி கட்டிடங்களின் திறப்பு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில்,ஜெ.எஸ்.எஸ்.கல்வி குழுமங்களின் இயக்குனர் மகேஷ், உதகை ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியின் முன்னால் அட்மின் புட்டராஜப்பா,கல்லூரி முதல்வர் மற்றும் தலைமை மருத்துவ அலுவலர் திலீப்,அட்மின் சண்முகம் ஆகியோர் பேசினர்.விழாவில், சுத்தூர் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ வீர சிம்மாசன மஹா சமஸ்தான மடத்தின் 24வது மடாதிபதியும், ஜெ.எஸ்.எஸ் மஹாவித்ய பீடத்தின் தலைவருமான பரமபூஜ்ய ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா சுவாமிஜி முன்னிலை வகித்து புதிய மாணவர் விடுதி கட்டிடங்களை, மாண்புமிகு தமிழக ஆளுநர் .ஆர்.என்.ரவி அவர்கள் திறந்து வைப்பதாக தெரிவித்தனர்.

மேலும் விழாவில். பொள்ளாச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் , கிணத்துக்கடவு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் , மற்றும் தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். சுதா சேஷய்யன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்..மேலும் ஜெ.எஸ்.எஸ் மஹாவித்யபீடத்தின் பிற முக்கிய பிரமுகர்களும் இவ்விழாவில் பங்கேற்பதாக கூறினர்.

புதிய மாணவர் விடுதி கட்டிடங்கள் 79,000 சதுர அடியில், 500 மாணவிகள் தங்கக்கூடிய, 152 அறைகளை கொண்டதாகவும், 33,000 சதுர அடியில் சுமார் 200 மாணவர்கள் தங்கக்கூடிய. 60 அறைகளுடைய, கட்டிடங்களாகும். மாணவர்களின் பயன்பாட்டை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக, நவீன மையப்படுத்தப்பட்ட, சுகாதாரமான சமையலறை பொருத்தப்பட்ட உள்கட்டமைப்பு அமைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க