• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா மரணம்- 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

January 9, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என அவ்வபோது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

மேலும், அவர் விரும்பும் போது வீட்டிற்குச் செல்லலாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு 11:30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதைத் தொடந்து “அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது” என சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஜோசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு “ ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கை பிப்ரவரி மாதம்
23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க