• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்

June 21, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி ஜூன் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்தது. இதையடுத்து,தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

இதனைத்தொடர்ந்து,ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதற்கிடையில்,ஜூன் 25 மருத்துவர் சிவக்குமார்,26-ம் தேதி மருத்துவர் நளினி,செவிலியர் பிரேமா ஆன்டனி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.மேலும்,ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.2வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க