• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெம் மருத்துவமனையில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு அறிமுகம்

August 7, 2022 தண்டோரா குழு

ஜெம் மருத்துவமனையில்ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு அறிமுகம்
மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

கோவை ஜெம் மருத்துவமனையில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையத்தை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ரோபோடிக் சிகிச்சை முறை மிகவும் வரவேற்கதக்கது. ரோபோடிக் கருவிகளை நாம் வெளியில் இருந்து வாங்கிறோம். இது போன்ற கருவிகள் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். நம் நாடு கொரோனா காலகட்டத்தை மிகவும் சிறப்பாக கையாண்டது. ரோபோடிக் சிகிச்சை முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, ரோபோடிக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தவாறே ரோபோடிக் கருவிகளை பல்வேறு இடங்களிலும் இயக்கி பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ரோபோடிக் கருவிகளை காண்பதற்கும் அதன் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்வதற்கும் மருத்துவமனை நிர்வாகம் உதவ வேண்டும். அப்போது தான் மாணவர்கள் புதிதாக பல தொழில்நுட்பங்களை கண்டறிய உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, மருத்துவமனை சிஇஓ, இணை இயக்குனர் பீரவின் குமார், ஐஎஸ்ஒ தலைவர் ராஜேந்திர டோபிராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க