• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜியோ “Future Phone” அறிமுகம்

July 21, 2017 தண்டோரா குழு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40ம் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி இன்று Jio Future Phoneஐ அறிமுகம் செய்தார்.

ஜியோ போன், வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ போன் வாங்குவோர் ரூ.1,500 மட்டும் செலுத்தி போனை வாங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என அந்நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் 1௦௦கோடி வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் வசதி வழங்கும் நோக்கில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜியோ போனின் சிறப்பம்சங்கள் 4ஜி, வாய்ஸ் கமான்ட்வசதி, எண் 5 அழுத்தி அவசர எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி, 1௦௦க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கக்கூடிய வசதி, வங்கி சேவைகளை இயக்கும் வசதி என பல உள்ளது.

ஆகஸ்டு 15 முதல் பீட்டா சோதனை முறையில் இந்த போன் வழங்கப்படுகிறது. அதன் பின் ஆகஸ்டு 24 -ம் தேதி முதல் ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க