• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜாதி ரீதியான மோதல்களை உருவாக்கும் நபர்களின் கைது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

July 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் ஜாதி ரீதியான மோதல்களை உருவாக்கும் நபர்களின் மீது கைது நடவடிக்கை எடுக்கக்கோரி கொங்கு மக்கள் முன்னணி சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கொங்கு மக்கள் முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் பார்த்திபன் தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கொங்கு மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்திற்கு தருவதற்கு ஆதரவாக கருத்து சொன்ன தமிழக பாஜக மாநில தலைவர் முருகன், மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, ஆகியோரை கண்டித்து கோவை மாவட்டத்தில், சுவரொட்டி ஒட்டி இருந்ததாகவும், மேலும், சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை மக்களுக்கு தெரியப்படுத்த விதமாக, சுவர் விளம்பரம் கோவை மாநகர் முழுவதும் எழுதப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் பேரூர், காளம்பாளையம், மற்றும் செல்லப்ப கவுண்டன் புதூர், பகுதியிலுள்ள எங்களது விளம்பரத்தின் மீது சுவரொட்டிகளை, சில மர்ம நபர்கள் சுவரொட்டியினை ஒட்டியுள்ளனர். மேலும் அந்த சுவரொட்டியில் ஒட்டுமொத்த கவுண்டர் சமூகத்திற்கும் எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளரான ஆறுமுகம் அவர்களுக்கும், கொலை மிரட்டல் விடும் நோக்கில் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது எனவும், எங்களது மாவட்ட நிர்வாகிகளுக்கு சுவரொட்டிகளில் மூலமாக பகிரங்க கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கடந்த 16ஆம் தேதியன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதாகவும், மனு அளித்த நான்கு நாட்களுக்குள், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எங்களது சுவரொட்டி மீது திட்டமிட்டு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை அமைப்பினர் எங்களது சுவரொட்டியை மறைத்து ஒட்டி, அதை காணொளி காட்சியாக, பதிவு செய்து சமூக வலைத்தளமான “வீரமள்ளத்தி” எனும் முகநூல் பக்கத்தில் கொங்கு மண்டலத்தில் தேவேந்திரகுல வேளாளர்களின் ஆதிக்கம் என்ற தலைப்பில் அதனை பதிவிட்டுள்ளார். எனவும், இது போன்ற செயல்கள் ஜாதி ரீதியான மத பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவும், அதனை கண்டித்து மீண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறை ஆணையாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனையில் மூலமாக நடைபெற இருக்கும் பல்வேறு கலவரங்களை தடுக்கும் பொருட்டு உடனடியாக இந்த காணொளியினை வலைத்தளங்களில் பதிவு செய்த, முகநூல் பக்கத்தின் அட்மினை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க