• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவு, தமிழக ராணுவ வீ’ரர் பலி

January 27, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழக வீரர் உள்பட 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடுமையான உறைபனி பெய்து வருகிறது. குரேஷ் செக்டார் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (27) ஆவார். குரேஷ் பகுதியில் பனிச்சரிவில் புதைந்த மேலும் 4 ராணுவ வீரர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க