• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டு கொலை

June 14, 2018 தண்டோரா குழு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பத்திரிக்கை ஆசிரியர் சுஜாத் புகாரி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி. இவர் இன்று தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஸ்ரீநகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இவரது காரை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், குண்டடிபட்ட சுஜாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் அவரின் பாதுகாப்பு அதிகாரிக்கும் குண்டடி ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க