February 14, 2019
தண்டோரா குழு
ஜம்மு-காஷ்மீர் அவந்திபுரா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகாரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர்.சமீபத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதல் இதுவாகும்.
பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.