• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்ஜம் புனித நீரை கொண்டு வர தடையில்லை : ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

July 9, 2019 தண்டோரா குழு

இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் கிணற்று நீரை எடுத்து வருவதை வழக்கமான வைத்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 4 ம் தேதி ஏர் இந்தியா அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜெட்டாவில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு இயங்கும் தங்கள் நிறுவன விமானங்களில் ஹஜ் யாத்திரையின் புனித நீரான ஜம் ஜம் நீரை கொண்டு செல்ல அனுமதியில்லை செப்டம்பர் 5 ம் தேதிவரைக்கும் இந்த தடை நீடிக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு இந்தியாவை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இந்நிலையில், அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனிய பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க