• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சையது பீடி ஆலைக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி சோதனை

June 28, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செய்யது பீடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் உள்ள செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமாக 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், செய்யது பீடி கிளை நிறுவனம், செய்யது டிரேடிங், செய்யது ஹோம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன கிளைகளில் சோதனை நடைபெறுகிறது.

அதைப்போல் நெல்லையில் உள்ள செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான வீடு,கிடங்கு உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 20 வாகனங்களில் வந்த 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நெல்லையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க